Tuesday, 22 July 2014

Childhood poems..


சினிமா
-----------------
பொழுதுபோக்குக்கு சினிமா
பொழப்பை பலருக்கு கொடுக்கும் சினிமா

ரசிக்கும் வண்ணம் சினிமா
ரசிகர் பலருடைய சினிமா

இன்பம் பயக்கும் சினிமா
இதயம் தொடும் சினிமா

கருத்து சொல்லும் சினிமா
கவினிக்க  வைக்கும் சினிமா

சாதி மதமில்லா சினிமா
சாதனையாளர்களை உருவாக்கும் சினிமா

கூட்டு முயற்சியில் சினிமா
கூடி காணலாம் சினிமா

கற்பனை உடைய சினிமா
காண்போரை கவரும் சினிமா

நகைச்சுவை கலந்த சினிமா
நம்மவர் விரும்பும் சினிமா

நடிப்பை வெளிக்கொணரும் சினிமா
நிச்சயம் வெல்லும் சினிமா


-------------------------
யானை
-------------------------

கருமை நிற யானை
கடவுள் உருவமுள்ள யானை

கரும்பு உண்ணும் யானை
காட்டில் வாழும் யானை

ஆலயத்தில் உள்ள யானை
ஆசிர்வாதம் அளிக்கும் யானை

இரக்கம் உள்ள யானை
உரக்க பிளிறும் யானை

சர்க்கஸில் உள்ள யானை
சாதனைகள் செய்யும் யானை

சவாரி செய்யலாம் யானையில்
சிறுவர் விரும்பும் யானை

முதுமலை காட்டில் யானை
மதயாற்றல் மிகுந்த யானை

முறம் போன்ற காதுடைய யானை
தந்தங்கள்  உடைய யானை

----------------------
மீன்கள்
----------------------

தண்ணீரில் வாழும் மீன்கள்
தன் உயிரை உணவாய் தரும் மீன்கள்

செதில்கள் கொண்ட மீன்கள்
(நச்சு கலந்த நீரால் ) செத்து மடியும் மீன்கள்

கண்கள் உடைய மீன்கள்
நம் கண்களுக்கு நல்ல மீன்கள்

வகை வகையாய் மீன்கள்
வறுவல் செய்யபடும் மீன்கள்

தண்ணீரை தூய்மையாக்கும் மீன்கள்
துர்நாற்றம்  அடிக்கும் மீன்கள்

கடலில் வாழும் சுறா மீன்கள்
மீனவருக்கு வாழ்வளிக்கும் மீன்கள்

அழகுக்கு வீட்டில் தங்க மீன்கள்
அனைவரும் ரசிக்கும் மீன்கள்







No comments:

Post a Comment