Saturday, 12 May 2012

My School Day Poems

மரங்கள்
—————-
பச்சை நிற மரங்கள்
பல வகை மரங்கள்
இலையை கொண்ட மரங்கள்
இயற்கை வளத்தை கூட்டும் மரங்கள்
மண் அரிப்பை குறைக்கும் மரங்கள்
மண் வளத்தை கூட்டும் மரங்கள்
வீட்டில் வளர்ப்போம் மரங்களை
மழையை பெறுவோம் விரைவிலையே…….

இறைவன்
——————-
எங்கும் இருக்கின்றான் இறைவன்
எதிலும் இருக்கின்றான் இறைவன்
உலக உயிரை காக்கின்றான்
உலக வாழ்வை நமக்கு அளிக்கின்றான்
பாவங்கள் அனைத்தையும் நீக்கிடுவான்
புண்ணியங்கள் அனைத்தையும் கூட்டிடுவான்
நரகத்தில் யாரும் தள்ள மாட்டான்
நல்ல உள்ளத்தை நமக்கு அளிப்பான்
இடம் அளிப்பான் எல்லோருக்கும் சொர்கத்திலே
இனிதாய் அனைவரும் தொழுவோமே . . .

பள்ளிக்கூடம்
——————
பள்ளிக்கூடம் சென்றிடுவோம்
பாடம் பல படித்திடுவோம்
ஆசிரியர்க்கு பணிந்திட்வோம்
அறிவின் ஆற்றலை வளர்த்திடுவோம்
கவனத்தை கல்வியில் செலுத்திடுவோம்
கண்ணென கருதி கற்றிடுவோம்
மதிப்பெண்கள் அதிகம் பெற்றிடுவோம்
மதியை தினமும் வளர்த்திடுவோம்
அக்கறை கல்வியில் செலுத்திடுவோம்
அகிலம் முழுதும் பெயர் பெறுவோம்
நன்றாய் தேர்வை எழுதிடுவோம்
நல்ல பெயரை பெற்றிடுவோம்
மழை மேகங்கள் ஒன்றுகூடினால்
மழை பொழியும்
மனதை ஒருமுகபடுத்தி படித்தால்
மதிப்பெண் மழை பொழியும்

No comments:

Post a Comment